நன்றி
31 songs
பாடல் - 1

நன்றிபலிபீடம் கட்டுவோம்

T-123 | E Minor
நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே

இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
58
பாடல் - 2

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே

S-121 | T-122 | G Major | Custom: G# Major
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு

ஆராதனை(6) உமக்குத்தானே

1. நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை

உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்

2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை

மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே

3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை

உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே
பாடல் எழுதியவர்:
Stanley
77
பாடல் - 3

இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்

S-28 | T-85 | G Major
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் அவர்
இனியும் நடத்திடுவார்

அவர் கிருபை என்றென்றுமுள்ளது - 2

தாழ்வில் நினைத்தவரே
என்னை தயவாய் தூக்கினீரே
சத்துருவின் கையினின்று விடுதலை தந்தவரை
என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்

உம் வார்த்தையால் தேற்றினீரே
ஆத்துமாவில் பெலன் தந்தீரே
கூப்பிடும் போது பதில் தரும் தேவனே
உம்மையே ஆராதிப்பேன்

உம் நீதியின் வலக்கரத்தால்
என்னை தாங்கி இரட்சிப்பவரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
என்றென்றும் நம்பிடுவேன்
பாடல் எழுதியவர்:
Joseph Aldrin
58
பாடல் - 4

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா

S- 25 | T-98 | G Major
அநாதி சிநேகத்தால் என்னை 
நேசித்தீரையா காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே – அன்பு

நிலையில்லாத உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அணைத்துக் கொண்டீரே

தாயின் கருவில் தோன்றுமுன்னே
தெரிந்து கொண்டீரே
தயைப் போல ஆற்றி தேற்றி
நடத்தி  வந்தீரே

நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனய்யா

கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபட வில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து  முடித்தீரே
பாடல் எழுதியவர்:
K. S. Wilson
64
பாடல் - 5

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

S-43 | T-95 | G minor
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
ஆராதனை ஆராதனை – 2

எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே – உம்மை

எல்ரோயி எல்ரோயி
என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை

யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மை
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
75
பாடல் - 6

இந்த மட்டும் காத்த எபெனேசரே

S-128 | T-116 | F Minor
1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை – அல்லேலூயா!

2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)

3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே – மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)

4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)
பாடல் எழுதியவர்:
Jesudoss
54
பாடல் - 7

இஸ்ரவேலின் துதிகளில்

S-8 | T-116 | D Major
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்

இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்

1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் – இனி நீர் மாத்ரமே

2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்லுகிறேன்
என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் – இனி நீர் மாத்ரமே

3. எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் – இனி நீர் மாத்ரமே
பாடல் எழுதியவர்:
John Jebaraj
42
பாடல் - 8

உங்க கிருபைதான்

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2

ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
பாடல் எழுதியவர்:
K. S. Wilson
26
பாடல் - 9

உன்னதரே உயர்ந்தவரே

T-82 | D# Major
உன்னதரே உயர்ந்தவரே
அழைத்தவரே என்னை நடத்துவாரே

அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை ஆராதனை

திசை தெரியாமல் நான் அலைந்த வேளை
வழி இதுவே என்று நடத்தினீரே

ஒன்றுக்கும் உதவாத என்னையுமே
உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே

ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்
சோராமல் தொடர கிருபை செய்யும்
பாடல் எழுதியவர்:
Rachel Anitha
57
பாடல் - 10

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே

2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே

3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே
பாடல் எழுதியவர்:
Johnsam Joyson
63
பாடல் - 11

அதிகாலை ஸ்தோத்திர பலி

2/4 | A Minor
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)

1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்

2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்

3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்

4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி

5. யோகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே

6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே

7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா

8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்

9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே

10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
36
பாடல் - 12

ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்

S-23 | F Major
ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்
ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர்
உமக்கே எங்கள் ஆராதனை

பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்
நீதிமானாக என்னை மாற்றினீர்
கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே
சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே

கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்
ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்
ஆசீர்வாதமானேனே(நீர்)
எனக்காய் சாபமானதனால்
சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே

ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே
எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே
செல்வந்தனாய் ஆனேனே 
நீர் ஏழ்மையானதனால்
சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே

என் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரே
உம் சுகத்தை என் உடலில் தந்தீரே
பாவத்தில் விளைவுகளை உம்
மரணத்தால் வென்றீரே
காயங்களால் நான் சுகமானேனே – உம்

வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும்
மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே
இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே – எங்கள்
எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே
பாடல் எழுதியவர்:
Joseph Aldrin
64
பாடல் - 13

உம் பாதம் பணிந்தேன்

S-14 | T-102 | C Minor
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம்

என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம்

கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம்

என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம்

சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்

பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம்
பாடல் எழுதியவர்:
Sarah Navaroji
44
பாடல் - 14

உம்மை ஆராதிக்கின்றோம்

S-112 | T-114 | C# Minor
உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2

என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்
58
பாடல் - 15

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்

S-36 | T-112 | A Major
உம்மை ஆராதிப்பேன் 
உம்மை ஆராதிப்பேன்-2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன் -2

1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2

2. எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையும் கிருபையும் தொடரச்செய்து
என்னை மீண்டும் நடக்க வைத்தீர் -2

3. பாவி என்றே என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2
பாடல் எழுதியவர்:
Jeeva
49
பாடல் - 16

அப்பா உம்மை நேசிக்கிறேன்

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

1. எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே – ஐயா

2. பலியாகி என்னை மீட்டிரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா – ஐயா

3. உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேகர் நீர்தானையா – ஐயா

4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே – அப்பா

5. அனுதின உணவு நீர்தானைய -என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு

6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா – ஐயா

7. ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
56
பாடல் - 17

பகல் நேரப் பாடல் நீரே

S-139 | T-132 | D Major
பகல் நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்

1. எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் என்

மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்

2. கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என் – மகிழ்ச்சியின்

3. தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி – மகிழ்ச்சியின்

4. பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை – மகிழ்ச்சியின்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
39
பாடல் - 18

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்

S-132 | T-134 | C Minor
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே

காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே

நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே

வால வயதுள்ளானோரும் – மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே
42
பாடல் - 19

அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை

S-11 | T-112 | F Major
அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பான்னு கூப்பிடவா
உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மான்னு கூப்பிடவா

அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை
அம்மான்னு கூப்பிடுவேன்

கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்

கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
விண்ணப்பத்தை கேட்டதப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை ஏங்குவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்
பாடல் எழுதியவர்:
K. S. Wilson
26
பாடல் - 20

அன்பின் தெய்வமே

F Minor
அன்பின் தெய்வமே என்னை
நடத்தும் தெய்வமே – நன்றியோடு
உம்மைப் பாடுவேன் -நான்

பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே

சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
இது அதிசயம் அதிசயம் தானே

புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே
இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே

பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்து விட்டேனே
உம் சித்தம் போல என்னை நடத்துமே
பாடல் எழுதியவர்:
K. S. Wilson
61
பாடல் - 21

அப்பா உம் கிருபைகளால்

S-53 | T-112 | D Major
அப்பா உம் கிருபைகளால் – என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே

தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது – 2

வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2

கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2

என்னை நினைக்கும் கிருபையிது 
என்னை நடத்தும் கிருபையிது - 2 
தந்தையை போல தோளில் சுமந்து 
என்னை நடத்தும் கிருபையிது - 2
பாடல் எழுதியவர்:
K. S. Wilson
68
பாடல் - 22

அரசாளும் தெய்வம் அப்பா உம் பாதம்

S-141 | T-134 | E Major | Custom: F Major
அரசாளும் தெய்வம் அப்பா உம் பாதம் 
ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே

3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே

4. நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே

5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
58
பாடல் - 23

அப்பா பிதாவே அன்பான தேவா

S-47 | T-104 | F Major
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே – 2

1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர் – 2
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறிவிட்டீர் – 2

நன்றி உமக்கு நன்றி – ஐயா (2) (… அப்பா)

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர் – 2
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர் – 2 (… நன்றி)

3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே – 2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே – 2 (… நன்றி)

4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எப்போதும் (எந்நாளும்) காப்பவரே – 2
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே – 2 (… நன்றி)

5. ஒன்றை நான் கேட்டேன் அதையே நான் தேடி
ஆர்வமாய் நாடுகிறேன் – 2
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம் பணி செய்திடுவேன் – 2 (… நன்றி)
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
46
பாடல் - 24

நன்றியோடு நல்ல தேவா

T-98 | D Major
நன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்

குறைவில்லாமல் நடத்தினீரே
தடை எல்லாம் நீர் அகற்றினீரே
என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
என் வாழ்வின் நாயகன் நீரே

உயர்விலும் தாழ்விலும்
என் துணையாக வந்தீரே 
நிறைவிலும் என் குறைவிலும் 
என் நம்பிக்கையானவரே
எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
என்னை மறவாமல் நினைப்பவரே

சோதனையில் வேதனையில்
என் பக்கமாய் நின்றவரே
முன்னும் பின்னும் பாதுகாக்கும்
நல் கோட்டையாய் இருப்பவரே
எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
உன் பரிகாரி நானென்று சொன்னவரே
எனக்கும் ஜீவன் தந்தவரே
22
பாடல் - 25

ஆத்துமாவே நன்றி சொல்லு

S-55 | T-116 | F Minor
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2

குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2

கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்

இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2 – நாம்

கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்

எப்போதும் கடிந்து கொள்ளார்
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே

தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
என்றென்றும் கோபம் கொண்டிரார்
தயவு காட்டுவது போல்
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார்

அவரது பேரன்பு வானளவு
உயர்ந்துள்ளது
கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
70
பாடல் - 26

ஆயிரம் ஆயிரம் நன்மைகள்

S-18 | T-96 | D Major
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை

காலை மாலை எல்லாம் வேளையிலும்
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி
தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்
நல்ல கர்த்தரே

மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே
பாடல் எழுதியவர்:
Johnsam Joyson
49
பாடல் - 27

ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே

T-110 | E Minor
ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்

1. பாவங்கள் எனக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை

2. ஆவியின் வரங்களைத் தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய்த் தந்தவரே
உமக்கே ஆராதனை

3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தவரே
உமக்கே ஆராதனை
37
பாடல் - 28

அல்லேலூயா கீதம் பாடுவேன்

S-121 | T-116 | E Major
அல்லேலூயா கீதம் பாடுவேன்
என் ஆண்டவரைக் கொண்டாடுவேன்
தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து
துதியின் கீதங்கள் நாவில் தந்தார்

ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜனுக்கே
ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே

துன்பமெல்லாம் போக்கிவிட்டாரே
துதியின் ஆடை எனக்குத் தந்தாரே
வாழ்த்திப்பாடுவேன் போற்றிப்பாடுவேன்
தாழ்வில் என்னை நினைத்தவரே

நன்றியால் உள்ளம் பொங்குதே
இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே
என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவே
எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே

உயிருள்ள நாட்களெல்லாம்
அவர் நாமம் உயர்த்திடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்
காலமெல்லாம் துதித்திடுவேன்
பாடல் எழுதியவர்:
R. Reegan Gomez
59
பாடல் - 29

அவர் சமுகம் என் சந்தோஷமே

அவர் சமுகம் என் சந்தோஷமே
அது நிறைவான சந்தோஷமே
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியுதே
ஆனந்தம் பேரானந்தமே

In his presence, there is fullness of joy (2)
My cup is overflowing
More than overflowing
Fullness blessed fullness of joy
59
பாடல் - 30

இடைவிடா நன்றி உமக்குத்தான்

T-105 | E Major
இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்

என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா

தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா

நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
60
பாடல் - 31

இதயம் நன்றியுடன் நிரம்பி

S-52 | T-108 | G Major
இதயம் நன்றியுடன் 
நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமே துதித்திடுவோம்

சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம்

தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும்

ஆவி ஆத்மா உடல் யாவும்
பரிசுத்தம் காத்துமே
பரன் பாதம் போற்றி வாழ்த்தி
எந்த நாளும் பணிகுவோம்

கர்த்தர் சமூகம் காத்திருந்து
பெலன் பெற்று எழும்புவோம்
துதி செய்தால் சோர்வு நீங்கும்
கர்த்தர் நாமம் போற்றுவோம்
48
Made with ❤️ by Alpha Foster