அல்லேலூயா கீதம் பாடுவேன்

S-121 | T-116 | E Major
அல்லேலூயா கீதம் பாடுவேன்
என் ஆண்டவரைக் கொண்டாடுவேன்
தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து
துதியின் கீதங்கள் நாவில் தந்தார்

ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜனுக்கே
ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே

துன்பமெல்லாம் போக்கிவிட்டாரே
துதியின் ஆடை எனக்குத் தந்தாரே
வாழ்த்திப்பாடுவேன் போற்றிப்பாடுவேன்
தாழ்வில் என்னை நினைத்தவரே

நன்றியால் உள்ளம் பொங்குதே
இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே
என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவே
எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே

உயிருள்ள நாட்களெல்லாம்
அவர் நாமம் உயர்த்திடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்
காலமெல்லாம் துதித்திடுவேன்
பாடல் எழுதியவர்:
R. Reegan Gomez
59
Tamil Christian Songs | CMM Choir
Made with ❤️ by Alpha Foster