துதி
15 songs
பாடல் - 1

இயேசுவின் நாமம் இனிதான நமாம்

S-32 | F Major
இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள்

பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்

பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்

வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்

நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நமாம்

முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்

சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திடும் நாமம்
46
பாடல் - 2

இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்

S-50 | T-118 | F Minor
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
வானம் பூமி யாவையும்
தம் வார்த்தையாலே படைத்தார்
சர்வ சிருஷ்டியின் நாயகன்
சர்வ லோகத்தின் ஆண்டவர்

1. நம் இயேசுவால் கூடாதது
ஒன்றுமே இல்லையே
அவரையே நம்புவோம்
என்றென்றும் ஆராதிப்போம்

2. இயேசு நீதி நிறைந்தவர்
சமாதான காரணர்
சர்வ வல்லவர்
சகல அதிகாரம் உடையவர்

3. நம் இயேசுவைப் போலவே
வேறே இரட்சகர் இல்லையே
நம் இரட்சண்ய கன்மலை
அவரே நம் தஞ்சமே
48
பாடல் - 3

இயேசுவே ஆண்டவர் மரணத்தினின்று

G Major
இயேசுவே ஆண்டவர்
மரணத்தினின்று உயிர்தெழுந்தார்
கால்கள் யாவும் முடங்கும்
நாவு யாவும் போற்றிடும்
அந்த இயேசுவே ஆண்டவர்
14
பாடல் - 4

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

S-36 | T-118 | F Minor
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை

நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை

இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே

ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே
பாடல் எழுதியவர்:
R. Reegan Gomez
68
பாடல் - 5

உம் நாமம் வாழ்க ராஜா

S-106 | T-114 | D minor
உம் நாமம் வாழ்க ராஜா
விண் தந்தையே
உம் அரசு வருக ராஜா
என் தந்தையே

யெகோவாயீரே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
யெகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்

வாழ்க ராஜா அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா

யெகோவாரூவா
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
யெகோவா ரஃப்பா
சுகம் தருபவர் நீர்

ராஜாதி ராஜா நீரே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
உயிரோடு எழுந்தவரே
வேகமாய் வாருமையா

மாரநாதா அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா
பாடல் எழுதியவர்:
Alwin Thomas
56
பாடல் - 6

உம்மை உயர்த்தி உயர்த்தி

S-2 | Pop | T-85 | D Major
உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம்மகிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா

1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) – உம்மை

2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர்;

3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

5. வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே

6. சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே

7. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
50
பாடல் - 7

அழகானவர் அருமையானவர்

S-14 | Pop | T-90 | E Minor
அழகானவர் அருமையானவர்
இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு

சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்ம நேசரே

கன்மலையும் கோட்டையும்
துணையுமானவர்- ஆற்றித்
தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே

கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்
பாடல் எழுதியவர்:
Sam Jebadurai
46
பாடல் - 8

அடைக்கலமே உமதடிமை நானே

S-50 | T-120 | D Major
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவரே -நடக்கும் வழிதனை
காட்டுபவரே நம்பி வந்தோனை
கிருபை சூழ்ந்து கொள்ளுதே

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே

பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை
திரும்ப தந்தீரே – உற்சாக
ஆவி என்னை தாங்கச் செய்தீரே
90
பாடல் - 9

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்

S-132 | T-134 | C Minor
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே

காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே

நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே

வால வயதுள்ளானோரும் – மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே
42
பாடல் - 10

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை

S-50 | T-119 | C# Major
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும்
இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்

இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்

கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – காக்கும்
கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்

யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்

பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் – ஆவி
ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன்
56
பாடல் - 11

நான் நேசிக்கும் தேவன்

S-46 | T-118 | E Major
நான் நேசிக்கும் தேவன்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை
என்றும் மாறாதவர்

நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

கடலாம் துன்பத்தில் தவிக்கும்
வேளையில் படகாய் வந்திடுவார்
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்

பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்

தூற்றும் மாந்தரின் நடுவில்
எந்தனை தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்றுகோலாய்
காத்திட வந்திடுவார்

நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே
44
பாடல் - 12

உயரமும் உன்னதமுமான

3/4 | T-140 | B Major
உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)

2. ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)

3. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)
பாடல் எழுதியவர்:
Wesley Maxwell
26
பாடல் - 13

அல்லேலூயா கர்த்தரையே

S-41 | T-122 | G Major
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் இயேசுவைத்  துதியுங்கள்

ராஜாதி ராஜனாம் ஏசுராஜன் பூமியில் ஆட்சிசெய்வார்
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்

தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிட துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத்  துதியுங்கள்

சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலையலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தைப் பரிசுத்தர்கள் நிரப்புவார் துதியுங்கள்
98
பாடல் - 14

ஆனந்தமாய் நம் தேவனை

S-55 | Disco | T-118 | G Major
ஆனந்தமாய் நம் தேவனை
கீதங்கள் பாடி துதித்திடுவோம்
தொழுவோம் பணிந்திடுவோம்
அவர்தான் பாத்திரரே

மகிமையும் வல்லமை
கனத்திற்கு பாத்திரர்
சகலமும் சிருஷ்டி தேவன்
அதிபதி இயேசுவே
பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்
பாத்திரர் இயேசு பாத்திரரே

ஒளிதரும் கண்களோ
சுடர்தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் சத்தம்
வலக்கரம் வல்லமை
சிறந்தவர் அழகில் சிறந்தவர்
துதிகளை செலுத்தி துதித்திடுவோம்

ஜீவன்கள் மூப்பர்கள்
தூதர்கள் யாவரும்
பணிந்திடும் தேவன் நீரே
பரிசுத்தர் இயேசுவே
ஆவியில் நிறைந்து தொழுவோம்
ஆண்டவர் இவரை பணிந்திடுவோம்
பாடல் எழுதியவர்:
Vincent Samuel
69
பாடல் - 15

ஆராதனை ஆராதனை ஆவியோடு

S-29 | T- 102 | E Minor
ஆராதனை ஆராதனை
ஆவியோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை
உண்மையோடு ஆராதிக்கிறோம்

ஆராதனை

சத்திய தேவனே உம்மை உயர்த்தி
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
நித்திய தேவனே உம்மை உயர்த்தி
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

யெகோவா யீரே பார்த்துக்கொள்வீர்
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெகோவா நிசியே வெற்றி தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

யெகோவா ருவா நல்மேய்ப்பரே
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெகோவா ரஃப்பா சுகம் தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
பாடல் எழுதியவர்:
Chandra Sekaran
49
Made with ❤️ by Alpha Foster