அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
யெஹோவா யீரே – (4)
1. புல்லுள்ள இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
மேய்ப்பனை போல் என்னை சுமந்திடும்
என் தேவனே
2. செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல் என்னை சுமந்திடும்
என் தேவனே
3. சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேனே
என் தேவனே
4. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா
நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்
நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்
என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்
நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே – என்னை
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே
என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே
எப்போது வருவீரையா
அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பயே நம்புவன் – நான் உம்
உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2
காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை – 2
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதம் இன்றி காப்பவரே – 2
பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே – 2
மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்
(இந்த) உலகம் எங்கும் நான் பலன் கொடுப்பேன் – 2
அப்பா என்னை முழுவதும்
அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்
1. உள்ளம் உடல் எல்லாமே
உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல்
காத்துக் கொள்ளுமையா – ஒரு
2. உலகப்பெருமை சிற்றின்பம்
உதறி விட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள்
கடந்து போனதையா
3. வாக்குவாதம் பொறாமைகள்
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய்
அணிந்து கொண்டேன் நான்
4. உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா (செத்ததையா)
அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்
வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே
விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா – 2
1. சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா
2. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2
துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே – 2
உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
3. நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2
நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய் – 2
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
4. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2
வற்ற கிருபை நதியே – என் பதியே – 2
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா
அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே
இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்
வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம்
போற்றிடுவோம்
ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா
கண்ணின்மனி போல காத்தருளும்
கழுகு போல சமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்
வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல்காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே
நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
சுட்டெரிக்கும் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே
வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)
1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்
உம் பீடத்தை சுற்றிச் சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே இயேசு நாதா
இதயமெல்லாம் மகிழுதையா
உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
*** உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம் உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகின்றேன்
என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்
1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர்
2. யெகோவா யீரே
எல்லாம் பார்த்துகொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பெலன் தருவார்
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார்
3. எல்ரோயீ என்னை காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே
கருமுதலாய் என்மேல் கண் வைத்து
நன்மைகள் செய்பவரே
ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
என் கண்ணீர் மாற்றிடுவார்
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்