அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பயே நம்புவன் – நான் உம்
உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2
காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை – 2
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதம் இன்றி காப்பவரே – 2
பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே – 2
மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்
(இந்த) உலகம் எங்கும் நான் பலன் கொடுப்பேன் – 2