ஆராதனை
26 songs
பாடல் - 1

உம் பீடத்தை சுற்றிச் சுற்றி

S-142 | T-148 | D Major
உம் பீடத்தை சுற்றிச் சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்

என் தெய்வமே இயேசு நாதா
இதயமெல்லாம் மகிழுதையா

உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்

*** உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்

கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம் உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகின்றேன்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
56
பாடல் - 2

உம்மை உயர்த்தி உயர்த்தி

S-2 | Pop | T-85 | D Major
உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம்மகிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா

1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) – உம்மை

2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர்;

3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

5. வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே

6. சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே

7. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
50
பாடல் - 3

உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்

S-25 | T-120 | D# Major
உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா

1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே -2

2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2

3. ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே -2

4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்
பாடல் எழுதியவர்:
K. S. Wilson
31
பாடல் - 4

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க

4/4 | T-78 | D# Major
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிக்க

ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்

வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனைத் தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
பாடல் எழுதியவர்:
John Jebaraj
16
பாடல் - 5

அரசாளும் தெய்வம் அப்பா உம் பாதம்

S-141 | T-134 | E Major | Custom: F Major
அரசாளும் தெய்வம் அப்பா உம் பாதம் 
ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே

3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே

4. நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே

5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
58
பாடல் - 6

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

4/4 | T-110 | E Major
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே

துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே

கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
50
பாடல் - 7

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்

S-11 | T-112 | E Major
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிட்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2

ஏஷுவா ஏஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம் 2
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2

ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அழிப்பீர் வெகு விரைவில் – 2
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர் – 2

வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
அணுகாமலே தப்புவிப்பீர் – 2
உமது சிறகுகளாலே
என்னை மூடி மறைத்து கொள்ளுவீர்- 2
பாடல் எழுதியவர்:
Joseph Aldrin
43
பாடல் - 8

உன்னத தேவனே என் இயேசு ராஜனே

S-2 | T-94 | F Major
உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா

1. உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன்

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா

2. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

3. பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்

4. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே
உம்முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே

5. கொடியாக படரணும் உந்தன் நேசமே
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான்

6. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
64
பாடல் - 9

உம்மால் ஆகாத காரியம்

S-51 | T-118 | G Major | Custom: F Major
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை (3)
எல்லாமே உமால் ஆகும் அல்லேலுயா
எல்லாமே உம்மால் ஆகும்

ஆகும் எல்லாம் ஆகும்
உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே (ஐயா நீரே)
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) – உம்மால்

எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே (ஐயா நீரே)
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) – உம்மால்

வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே)
அவாந்தர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) – உம்மால்
42
பாடல் - 10

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே

S-121 | T-122 | G Major | Custom: G# Major
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு

ஆராதனை(6) உமக்குத்தானே

1. நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை

உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்

2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை

மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே

3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை

உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே
பாடல் எழுதியவர்:
Stanley
77
பாடல் - 11

எந்தன் கன்மலையானவரே

S-51 | T-120 | G Major
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே

ஆராதனை உமக்கே(4)

1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே — ஆராதனை

2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை

3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை
பாடல் எழுதியவர்:
R. Reegan Gomez
51
பாடல் - 12

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

G Major
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்

ஆ ஆ ஆ.. அல்லேலூயா ஆமென்

வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்

சாத்தான் உன்னை எதிர்த்த போதும்
ஜெயகிறிஸ்து உன்னோடு உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதி கானம் தொனித்து மகிழ்வாய்

கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே

எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம்
படைக்கின்றோமே – ஏங்குகின்றோம்
உம் ஆசீர் பெறவே
42
பாடல் - 13

அரியணையில் வீற்றிருப்பவரே

S-79 | T-118 | F Major | Custom: G Major
அரியணையில் வீற்றிருப்பவரே
உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை

உமக்கே ஆராதனை

அடைக்கலமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்ற துணை நீரே - உமக்கே

பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்

எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள்

நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடைபடாது என்றறிவேன்
சகலத்தையும் செய்ய வல்லவர்
அனைத்தையும் செய்து முடிப்பவர்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
100
பாடல் - 14

இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே

S-23 | T-80 | A Major
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)

1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்
பாடல் எழுதியவர்:
Wesley Maxwell
54
பாடல் - 15

உம்மை ஆராதிக்கின்றோம்

S-112 | T-114 | C# Minor
உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2

என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்
58
பாடல் - 16

ஆராதனை ஆராதனை ஆவியோடு

S-29 | T- 102 | E Minor
ஆராதனை ஆராதனை
ஆவியோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை
உண்மையோடு ஆராதிக்கிறோம்

ஆராதனை

சத்திய தேவனே உம்மை உயர்த்தி
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
நித்திய தேவனே உம்மை உயர்த்தி
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

யெகோவா யீரே பார்த்துக்கொள்வீர்
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெகோவா நிசியே வெற்றி தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

யெகோவா ருவா நல்மேய்ப்பரே
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெகோவா ரஃப்பா சுகம் தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
பாடல் எழுதியவர்:
Chandra Sekaran
49
பாடல் - 17

நன்றிபலிபீடம் கட்டுவோம்

T-123 | E Minor
நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே

இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
58
பாடல் - 18

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

S-36 | T-118 | F Minor
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை

நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை

இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே

ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே
பாடல் எழுதியவர்:
R. Reegan Gomez
68
பாடல் - 19

அன்பின் தெய்வமே

F Minor
அன்பின் தெய்வமே என்னை
நடத்தும் தெய்வமே – நன்றியோடு
உம்மைப் பாடுவேன் -நான்

பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே

சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
இது அதிசயம் அதிசயம் தானே

புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே
இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே

பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்து விட்டேனே
உம் சித்தம் போல என்னை நடத்துமே
பாடல் எழுதியவர்:
K. S. Wilson
61
பாடல் - 20

என்னைக் காண்பவரே தினம் காப்பவரே

S-46 | T-108 | F Minor | Original: D Minor
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே

ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்

எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்

நன்றி ராஜா இயேசு ராஜா

முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப் பற்றி பிடித்திருக்கின்றீர்

கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
54
பாடல் - 21

இராஜா உம் மாளிகையில்

S-14 | T-93 | G minor
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் உம்மை

என் பெலனே என் கேட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்

எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே

பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே

சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே

உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே

தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
56
பாடல் - 22

என் நேசர் நீர்தானையா

S-123 | T-90 | G Minor
என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா

எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்

உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே

துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
பாடல் எழுதியவர்:
R. Reegan Gomez
40
பாடல் - 23

நீர்தான் என் தஞ்சமே

நீர்தான் என் தஞ்சமே
நீர்தான் என் கோட்டையே
துன்ப வேளை தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
இயேசையா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

நீர்தான் என் பெலனே
நீர்தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து
கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே

நீரே என் ஆதாரமே
நீரே என் துணையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே

இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை
8
பாடல் - 24

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

S-25 | 6/8 | T-120 | E Major
கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது

ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்,
உண்டாக்கி மகிழ்ந்தாரே

இன்று போற்றிப் புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் (2)

பகலை ஆள்வதற்கு,
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்

செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச்செய்தார்
பார்வோனையும் படைகளையும்
அதிலே மூழ்கடித்தார்

வனாந்திரப் பாதையில்,
ஜனங்களை நடத்திச் சென்றார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக்கொண்டார்

தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகிறார்.
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
19
பாடல் - 25

ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே

T-110 | E Minor
ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்

1. பாவங்கள் எனக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை

2. ஆவியின் வரங்களைத் தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய்த் தந்தவரே
உமக்கே ஆராதனை

3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தவரே
உமக்கே ஆராதனை
37
பாடல் - 26

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்

6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
18
Made with ❤️ by Alpha Foster