இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
1. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – இயேசு கிறிஸ்துவின்
2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – இயேசு கிறிஸ்துவின்
மாறிடா எம்மா நேசரே- ஆ
மாறாதவர் அந்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே
பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே
உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே
ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க
நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே
பயமதை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே
மனதுருகும் தெய்வமே இயேசய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா
எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா ஐயா
சாபமான முள்முடியே
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா
எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகாமானோம் உந்தன்
தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே
பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே
சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே
எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்
மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சீந்தினீரே -2
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
என் மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக்கினையில் நின்று மீட்ட
சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்
எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல
தாங்கக்கூடாத மா பாரம்
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்தும் மறந்தும் தள்ளனீர்
எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
மனபாரத்தால் சோர்ந்திடும்போது
ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர்
எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்து வருவேன்
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2
இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே – 2
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2
தேவையான ஒன்று நீங்க தானே
எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2
அன்புகூர்ந்து பலியானீரே
இரத்தம் சிந்தி இரட்சித்தீரே – 2
கிருபையினால்
மீறுதல்கள் மன்னித்தீரே
இரக்கத்தினால்
வியாதிகள் நீக்கினீரே – 2
அன்பினாலும் மகிமையினாலும்
முடிசூட்டி மகிழ்கின்றீர் – 2 – உம்
குழியிலிருந்து மீட்டீரே
நன்றி ஐயா
உன்னதத்தில் அமரச் செய்தீர்
நன்றி ஐயா – 2
எனையாளும் தகப்பன் நீர்தான்
எனக்குரிய பங்கும் நீர்தான் – 2
நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்
பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா
புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே
இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்
1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ
2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்
3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்
4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ
அந்தோகல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குறார் (2)
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக் குருசை தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே (2)
அழகுமில்லை சௌந்தர்யமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
முள்ளின் முடியும்
செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்குறார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே
அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே
சிலுவைக்காட்சியைக்கண்டுமுன்னேறி
சேவை செய்வேன் ஜீவனும் வைத்தே என்னைச்சேர்த்திடவருவேனென்றார்
என்றும் உண்மையுடன்
நம்பி வாழ்ந்திடுவேன்
என்மீது அன்புகூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே
1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே
2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்
3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர்
4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே
சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே
எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்