இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
1. மேய்ப்பர்கள் இராவினிலே
தங்கள் மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே
தோன்றி தேவனை துதித்தனரே – இயேசு
2. ஆலொசனைக் கர்த்தரே
இவர் அற்புதமானவரே
விண் சமாதான பிரபு
சர்வ வல்லவர் பிறந்தனரே – இயேசு
3. மாட்டுத்தொழுவத்திலே
பரன் முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம்
அவர் ஏழையின் பாதையிலே – இயேசு
4. பொன் பொருள் தூபவர்க்கம்
வெள்ளை போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே
வான சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு
5. அன்னாளும் ஆலயத்தில்
அன்று ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே
கூறி தூயனை புகழ்ந்தனளே – இயேசு
6. யாக்கோபிள் ஓர் நட்சத்திரம்
இவர் வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே
நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு